கைதிகளுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கலாம் – சிறைச்சாலைகள் திணைக்களம்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புகளை உறவினர்கள் கைதிகளுக்கு வழங்க முடியும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பாக ஒருவருக்கு மட்டுமான அளவு பொருள்களே அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.