19 மீனவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு !!

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

19 இந்திய மீனவர்களும் நாடு திரும்பியதை இலங்கையில் உள்ள இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சென்னைக்கு சென்றனர்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அதற்கெதிரான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.