பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின் !!

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மொத்தம் 4 மில்லியன் மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் அவர்களில் சுமார் 1.2 மில்லியன் பேர் மாணவிகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள், மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் 800,000 மாணவிகளுக்கு சனிட்டரி நாப்கின் வழங்கப்படவுள்ளது.

அதன்படி இம்மாதம் முதல் ஆண்டுதோறும் இலவச சுகாதார சனிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.