ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிணை கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது/

இருப்பினும் பிணை வழங்குவதற்குப் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்று நீதிபதி பிணை மனுவை நிராகரித்தார்.