இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கி யுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.