கஞ்சா கலந்த பீடியுடன் யாழ்.போதனாவில் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (20 கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவலாளிகள் பரிசோதித்த போது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.