உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதல் முடிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதல் முடிவு சற்றுமுன்னர் தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2260 வாக்குகளைப் பெற்று 9 இடங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1397 வாக்குகளைப் பெற்று தங்காலை நகர சபையில் 5 இடங்களைப் பெற்றுள்ளது.

இதே நேரத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 795 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்று பிரதேச சபையில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

“சர்வஜன பலய” 177 வாக்குகளைப் பெற்று தங்காலை நகர சபையில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.