7 இலட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் 7 இலட்சத்துக்கு 38 ஆயிரத்து 659 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் இம்முறை அதிக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 22 ஆயிரத்துக்கு 551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பதற்கான  வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் அந்த இடங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.