வடக்கு ஆளுநரின் உதவியை நாடிய கேப்பாப்புலவு மக்கள் !!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணிகளை விடிவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு அப்பகுதி மக்கள் வட  மாகாண ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று ஆளுநரை சந்தித்த கேப்பாப்பிலவு மக்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை வழங்கினர்.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி “L” வலயத்தில் உள்ள கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்கேணி ஆகிய இடங்களை சொந்த இடமாக கொண்ட மக்களும் வட  மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.