வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை….!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்பு எண்களை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுள்ளதாகவும், அவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் ஆவணங்கள் அந்தந்த மாவட்டச் செயலர்களிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

இன்றும் (15) நாளையும் (16) விருப்பு இலக்கங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக இன்று காலை அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் நடைபெறுகிறது.

 

ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச செலவு உட்பட, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய அம்சங்கள் குறித்தது இதன்போது கலந்துரையாடப்படும்.