ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அச்சிடப்பட்டது – அரச அச்சகர்

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வேட்புமனு மற்றும் கட்டுப்பணம் செலுத்துவதற்கு தேவையான தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஆவணங்களையும் அச்சிடப்பட்டு விநியோகிப்பதற்கு தயாராக உள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அச்சிடப்பட்ட தாள்கள் நேற்று காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலுக்கு தேவையான ஆவணங்களை அச்சிடுவதுடன், தேர்தலுக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று அல்லது நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *