யாழ்ப்பாணத்தில் நாளை கறுப்பு யூலை நினைவேந்தல் !!

யாழ்ப்பாணத்தில் நாளையதினம் கறுப்பு யூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடாக நடைபெற்ற கறுப்பு யூலை கலவரம் இடம்பெற்று 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ் உணர்வார்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *