ஜனாதிபதி வேட்பாளர்கள், பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவு !!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள், பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் காலம் முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி பிரியந்த பெரேரா, முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் தலைவர்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு வருடங்களாக எதிர்கொண்ட இக்கட்டான காலநிலையில் தேசிய பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தி நாட்டை ஸ்திரப்படுத்த பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *