கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞனுக்கு வாள் வெட்டு !!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்டு வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு சென்ற இளைஞனே, அடையாளம் தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் அந்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

பூநகரி கிராஞ்சி பகுதியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *