பல்கலைக்கழகத்திற்கான அனுமதிக்கு என 87 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்!

பல்கலைக்கழகத்திற்கான அனுமதிக்கு என 87 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 87 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் ஊடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதாகவும் அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான வெட்டுப்புள்ளியை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதேநேரம் 74 நாட்கள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை அடுத்த சில வாரங்களில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *