சீரற்ற காலநிலையால் 26 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 ஆயிரத்து 361 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் மாத்திரம் வறட்சி காரணமாக 8 ஆயிரத்து 357 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கிளிநொச்சியில் வறட்சி காரணமாக 239 குடும்பங்களை சேர்ந்த 732 பேரும் யாழ்ப்பாணத்தில் 8 ஆயிரத்து 118 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 506 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் காலி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வீசிய பலத்த காற்று காரணமாக சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 8 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *