ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் !!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் செலவினங்களுக்காக தேவைப்படும் நிதியை விடுவிக்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடியும் என நிதியமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் தொடர்பாக கலந்துரையாடலை நடத்த எதிர்வரும் 17ஆம் திகதி வருகைதருமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு  தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அச்சுப்பணிகளுக்காக 800 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாமெனவும் என்றும் இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்.

அதற்கமைய, இம்மாத இறுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *