National Election Commission Allows Voting at Alternate Polling Stations in Presidential Polls

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் !!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தலைமையில் இன்று காலை விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.

இதேவேளை, விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக நாளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதியைப் பெற்றுக் கொள்வது மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நிதி அமைச்சும் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முன்னதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *