இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும் இலங்கையின் தற்போதைய அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.