ஆட்சிப்பொறுப்பை ஏற்கத் தயங்கியவர்கள் இன்று அதிகாரத்திற்கு ஆசைப்படுகின்றார்கள் !!

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிளவுபட்டு சென்ற கட்சிகள் இறுதியில் காணாமல் போன வரலாறுகளே கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளதாக பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு வீழ்ச்சியடைந்திருந்த போது ஆட்சிப்பொறுப்பை ஏற்கத் தயங்கியவர்கள் இன்று நாடு நல்ல நிலைக்கு வந்தபின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்க ஆசைப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.