டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் 21 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பாக 7,547 டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 08 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால், டெங்கு நுளம்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எனவே டெங்கு நோயைத் தடுக்க சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *