விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளித்த பெண்ணும் கணவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த மூவர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவர் நீரில் அடிபட்டு செல்வதை கண்டு அவரது கணவர் அவரை காப்பாற்ற முயற்சித்த அதேநேரம் இருவரையும் காப்பாற்ற மற்றுமொரு இளைஞனும் முயற்சி செய்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர் 22 வயதுடைய பெண் எனவும், மற்றவர் 28 வயதுடைய அவரது கணவர் என்றும் அவர்கள் திஹாரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.