தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடனும் இணைவோம் !!

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடனும் இணைந்து பயணிக்கத் தாம் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் அண்மையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றிருந்தமை பல்வேறு விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் மாத்திரமல்லாது ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல முக்கிய கட்சிகளின் கூட்டங்களிலும் அவர்களது அழைப்பின் பேரில் சுமந்திரன் கலந்துகொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களோடு இணைந்து பயணிக்க தயாரில்லை என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியுடன் மாத்திரமல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்க ஆகியோருடனும் தாம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வோம் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *