பிராந்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பேணுவதற்கு அமெரிக்கா விருப்பம்

இலங்கையுடன் பிராந்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பேணுவதற்கு அமெரிக்கா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்காக இலங்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேண அமெரிக்க விருப்பம் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போது ஜேக் சல்லிவன் இதனைத் தெரிவித்தார் என வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு, இறையாண்மைக்கு அமெரிக்காவின் ஆதரவு உட்பட இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைள் தொடர்பாகவும் இந்த தலைப்பேசி உரையிடலின் போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *