2028 ஆம் ஆண்டுவரை வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவது இடைநிறுத்தம்

வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவதை 2028 ஆம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதி பேச்சு வார்த்தைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கடன்களை மீள செலுத்துவதை இடைநிறுத்தி வைப்பது தொடர்பிலும் வட்டியை செலுத்துவது தொடர்பிலும் கடன்வழங்கிய நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகவும் அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சகல ரத்நாயக்க கூறியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வங்குரோத்து நிலை ஏற்பட்டதை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்து.

இதேநேரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கிய தீர்மானம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் அது வர்த்தக நோக்கத்தை கொண்டது என சகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய பாதுகாப்பிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என்றும் குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுதக்கூடிய வடபகுதி குறித்து கவனத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *