மருதமடு அன்னையின் திருச்சொரூபம் யாழுக்கு !!

மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்று எடுத்து வரப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட திருசொரூபம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை எடுத்து செல்லப்படுகிறது.

100வது ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ் ஆயரின் வேண்டுகோளுக்கு அமைவாக மருதமடு அன்னையின் திருச்சுரூபத்தை மன்னரை தவிர்த்து யாழ் மாவட்டத்திற்கும் எடுத்து வரப்பட்டது.

இப் புனித நிகழ்வு மருதமடுத் திருத்தலத்திற்குச் சென்றுவர முடியாத அன்னையின் பக்தர்களுக்குப் பெரும் ஆசீர்வாதம் என யாழ் மறைமாவட்ட ஆயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *