சிறைச்சாலையில் ஞானசார தேரருக்கு காவி களையப்பட்டது !!

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடையே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உடையையே அவரும் அணிந்திருப்பதாகவும் அவருக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக ஞானசார தேரர், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதேநேரம் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *