எல்லை தாண்டி மீன்பிடி : 21 தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக மீனவர்கள் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன் போது தலா 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

அத்தோடு எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒத்தவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *