அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது !!

யாழ்ப்பாணம் அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அனலைதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள், காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இலங்கை இந்திய அரசாங்கங்கள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் இன்றைய தினம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *