போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி !!

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது தமது பிரதிவாதி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் பயணத் தடையை நீக்கி உத்தரவிடுமாறு சமர்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை ஆராய்ந்து முன் பிணை நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு பயணத் தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியது.

கடந்த ஆண்டு மே மாதம் மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜெரோம் பெர்னாண்டோவிற்கு கடந்த ஜனவரி 3 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.

இருப்பினும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருந்த நிலையில் இன்று வெளிநாடு செல்வதற்கான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *