யாழ் மத்திய பேருந்து நிலையதிற்கு சென்று அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் டக்ளஸ்

முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப் பகுதியானது சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாகவும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்நிலையில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பேருந்து நிலைய வளாகத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் ஏற்படுத்தி கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *