ரணிலை நம்ப முடியாது… ! வேலன்சுவாமிகளே பொது வேட்பாளர் – விக்கி

வட, கிழக்கு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒருபோதும் நம்ப முடியாது என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே பொது வேட்பாளராக போட்டியிட வேலன் சுவாமிகள் சிறந்தவர் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *