மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை – ஐவர் கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரைக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்ட இந்தச் சந்தேகநபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேநேரம் நாவாந்துறை பகுதியில் முச்சக்கர வண்டியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரின் முச்சக்கர வண்டிக்குள் இருந்து 300 போதை மாத்திரைகளையும் பொலிஸார் மீட்டனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *