சில மணி நேரங்களுக்குள் 22 பேர் வைத்தியசலையில் அனுமதி : சம்பவ இடத்தில பொலிஸ்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

22 பேரும் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டமையால் வைத்தியர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள், வைத்தியசாலைக்கு உள்ளும் மோதல் போக்குடன் இருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.