ஆற்றில் குளிக்க சென்ற பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!

மாஓயாவில் குளித்த பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஒரு சிறுவன் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், ஏனைய நால்வரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *