நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இராஜினாமா !!

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார இன்று (20) அறிவித்துள்ளார்.

இன்று காலை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான சிறிது நேரத்திலேயே, வசந்த யாப்பா பண்டாரவை கோப் உறுப்பினராக நியமிப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

எவ்வாறாயினும், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.