யாழிலிருந்து வவுனியாவுக்கு வாகன பேரணி: அனைவரையும் ஒன்றிணைய பகிரங்க அழைப்பு

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளாதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 07.30 மணிக்கு யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இருந்து வவுனியாவுக்கு வாகன பேரணி செல்லவுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டுகொள்ளா விட்டால் நாளை வடகிழக்கு எங்கும் தொல்லியல் சட்டம் என கூறி அனைத்து பிரதேசங்களையும் ஆக்கிரமிக்ககூடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

ஆகவே அனைவரையும் குறித்த பேரணியில் கலந்துகொள்ள வருமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *