சிவராத்திரி தினத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திரண்ட மக்கள்: பொலிஸ் தடையை மீறிய போராட்டம்

பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான நிலையில், நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த மண் எங்களின் சொந்த மண்”, பொலிஸ் அராஜகம் ஒழிக”, தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கலை நிறுத்து” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை
ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சி.சிறீதரன், வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *