குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் அறியப்படுத்தலாம்

குடிநீர் பிரச்சினைகள் காணப்படுமாயின் அப்பகுதி மக்கள் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்க முடியும்.

அதற்காக 117 என்ற எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையைக் கருத்தில் கொண்டு, குடிநீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் வசிப்பவர்கள் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்புகொள்ள முடியும்.

தற்போது கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 3,000 குடும்பங்கள் குடிநீரின்றி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *