மகளையும், மகனையும் கொலை செய்த தந்தை – அம்பாறையில் சம்பவம்

தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக் கொன்றுவிட்டு ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று அம்பாறை, பெரிய நிலாவெளியில் பதிவாகியுள்ளது.

தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் 63 வயதுடைய நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவர் அவரது 29 வயது மகன் மற்றும் 15 வயது மகள் என்றும் இவர்கள் இருவரும் பேச்சு குறைபாடால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரட்டைக் கொலை சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபர் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *