எக்ஸ்-பிரஸ் பேர்ல் வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி

நாட்டின் கடல்சார் சூழலுக்கு சேதம் விளைவித்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட X-Press Pearl கப்பலின் கப்டன் உட்பட 8 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை நேற்று (13) மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபயகோன் மற்றும் பி. குமாரரட்ணம் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே மனு நிராகரிக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் 26(அ) பிரிவின் பிரகாரம் எட்டு குற்றச் சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *