மின்சார சபை மறுசீரமைப்பய் விரைவாக இறுதி செய்ய திட்டம் – அமைச்சர்

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான வரைவை விரைவாக இறுதி செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரிடமிருந்து தெளிவுபடுத்தல்கள் மற்றும் வரைவுக்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் என்பன கிடைத்த பின்னர் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்ற போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *