முட்டைக்கு கட்டுப்பாடு விலை விதிக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சருக்கும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் போது, தற்போதுள்ள முட்டை விலைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. மேலும் 48 ரூபாயாக உள்ள முட்டையின் விலையை மேலும் குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தபட்டது.

எவ்வாறாயினும், முட்டை உற்பத்தியாளர்கள் விலையை குறைக்கத் தவறினால் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.