தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது !

3 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடத்தப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பு 01 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதி கொண்டவை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனவும், 2005ஆம் ஆண்டு முதல் பல வருடங்களாக சிறையில் இருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மாத்தறையில் உள்ள பொலிஸ் விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *