வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் !

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநரை  நேற்றையதினம் (12) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னை மற்றும் பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், பயணிகள் கப்பல் சேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *