கனேடிய தூதுவரை சந்தித்த அனுர !!

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வொல்ஷ், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.

மேலும் தேசிய நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் இதன்போது அனுரகுமார திசாநாயக்க விளக்கியிருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் நாட்களில் கனடாவில் வசிக்கின்ற இலங்கையரைச் சந்திக்கவுள்ள நிலையில் இதற்கு கெண்டிய தூதுவர் நல்வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *