வெடுக்குநாறி மலை விவகாரம் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை

வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்தோடு தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தெரிவித்து அவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *