வெடுக்குநாறிமலை விவகாரம் : பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேச்சரர் ஆலையத்தில் கைதான பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 வரை விளக்கமறியல் உத்திரவை வவுனியா மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதன்போது ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

அவர்களைக் கடந்த 9 ஆம் திகதி வவுனியா நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தால் இன்று வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தொல்பொருள் சின்னங்களைச் சந்தேகநபர்கள் சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *