சிங்கள மக்களின் வாக்கிற்காக தமிழ்த் தேசியம் ஒடுக்கப்படுகின்றது – மணிவண்ணன் குற்றச்சாட்டு

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக யாழ். மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளை நடத்தவிடாமல் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தென்னிலங்கை வாக்குகளை பெற இனவாத தீயினை மூட்டுவதற்கான முன்னேற்பாடாகவே தான் இதனை பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் அடாவடித்தனத்துக்கு பின்னால் ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து வாக்குகளை பெற தென்னிலங்கை முயற்சிக்கின்றதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *