பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி 14 ஆண்டுகளின் பின்னர் கைது

14 வருடங்களாக தலைமறைவாகி இருந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டகுற்றவாளி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையிலே கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக மட்டக்களப்பு உயர் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *